Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை சரிவு

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (19:17 IST)
நாமக்கல் மாவட்டத்தில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை கடந்த மூன்று நாட்களாக 40 காசுகள் குறைந்துள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க மேற்கொண்ட திட்டத்தில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு, குறு வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களிடையே பணம் புழக்கம் இல்லாததால் வியாபாரம் ஒரு பக்கம் பாதிப்படைந்து வருகிறது.
 
உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிய நிலையில் உள்ளன. இதனால் முட்டை விலையும் சரிவை சந்தித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைப்பெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 82 காசிலிருந்து 3 ரூபாய் 62 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மூன்று நாட்களில் முட்டை ஒன்றின் விலை 40 காசுகள் குறைந்துள்ளது. சில்லரை தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் கூறினார்கள். மேலும் தினமும் 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments