Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் - நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 4 மே 2016 (15:29 IST)
மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
 

 
கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால். எ.கே.கோயல். ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
 
இந்நிலையில் கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதமானது ஆகும். கல்வி வணிகமயமாவதை அனுமதிக்க முடியாது. கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நிறுவுவது தவறானது.
 
அரசு நன்கொடை வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறவேண்டும். மாறாக நன்கொடை அடிப்படையில் நடைபெறக்கூடாது என்று தெரிவித்திருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments