Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் 9 மணிக்கு வரவேண்டும்!

Webdunia
புதன், 4 மே 2022 (11:43 IST)
நாளை (மே 5) தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 
கோடை வெயில் தற்போது கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பெரும் அவதியுற்று வருகின்றனர். ஏற்கனவே ஹரியானா ஒரிசா ஆகிய மாநிலங்களில் காலையில் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வர வேண்டும் என்பதை அரசு தேர்வுத்துறை மாற்றியமைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments