அதிமுகவின் ஒரு தொண்டரை கூட ஸ்டாலினால் தொட முடியாது! – எடப்பாடியார் பதிலடி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (14:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடைய போவதாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி “நாட்டுக்காக உழைத்த நல்லவர்களால் உருவாக்கப்பட்டது அதிமுக. அதை ஸ்டாலின் உடைக்க பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என அவர் கனவு காண்கிறார். ஆனால் அவரால் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவின் தொண்டர் ஒருவரை கூட ஸ்டாலினால் தொட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments