Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

Mahendran
சனி, 9 ஆகஸ்ட் 2025 (15:42 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருமாவளவன் எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் 'மனிதக் கடவுள்' என போற்றி கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார் என்றால், அவர் அரசியலில் காணாமல் போய்விடுவார். இது நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்தார்.
 
அ.தி.மு.க. ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்துக்கோ அப்பாற்பட்ட கட்சி என்று குறிப்பிட்ட இ.பி.எஸ்., "ஒரு சாதியை வைத்து அரசியல் செய்வது சாத்தியமற்றது. எங்கள் கட்சியில் பல்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த ஒற்றுமை திருமாவளவனுக்கு பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்காததால் ஏற்பட்ட எரிச்சலில்தான் எம்.ஜி.ஆரை மோசமான வார்த்தைகளால் பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
 
தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் குறித்து சந்தேகம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க. கூட்டணி இன்னும் எட்டு மாதங்களுக்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வரவிருக்கும் எட்டு மாதங்களில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments