Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் பட்ஜெட்னு ஒன்னு இல்லவே இல்லை..! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (12:17 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்படி ஒன்றே இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முறை தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “வேளாண் பட்ஜெட்டுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்னும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரக்கணக்கான கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்த காங்கிரஸ்.. எந்த நம்பிக்கையில்?

பெண்ணிடம் திருட முயற்சி செய்த திருடன்.. பெண் சுதாரித்ததால் திருடனுக்கு படுகாயம்..

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!

கருத்து கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு.. அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஆர்பி உதயகுமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments