Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கதான் ஒரிஜினல் அதிமுக.. போலிகளை கண்டு ஏமாறாதீர்?! – எடப்பாடியார் காரசார பதில்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (12:22 IST)
சசிக்கலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என கூறிக் கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி காரச்சார பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவின் பொன்விழா தொடக்க நிகழ்வு நடந்த நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிக்கலா, அங்கு அதிமுக பொதுச்செயலாளர் என்றே தனக்கு கல்வெட்டு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ஆளுனரை சந்திக்க சென்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பேசியபோது “சசிக்கலா தற்போது அதிமுக கட்சியிலேயே இல்லை. கட்சியில் இல்லாத ஒருவரை நினைத்து நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நாங்கள்தான் உண்மையான அதிமுக கட்சி என தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments