Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் நீரை விட பீருக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Mahendran
சனி, 4 மே 2024 (16:30 IST)
திமுக ஆட்சியில் நீரை விட பீருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் திமுக ஆட்சி எப்போது வந்ததோ அப்போதிலிருந்து மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்றும் ஈபிஎஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஏனென்றால் மதுவில் தான் அதிக வருமானம் வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்

அதிமுக ஆட்சியில் தொடங்கிய காரணத்தினால் தான் சில நீர்வள திட்டங்களை திமுக அரசு கைவிட்டது என்றும் தற்போது வறட்சிக்கு அது தான் காரணம் என்று இபிஎஸ் குற்றம் சாட்டு தெரிவித்தார். குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் மீதம் இருக்கும் பதினைந்து சதவீத பணிகளை முடிக்காமல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர் என்றும் அதனால் தான் தமிழ்நாடு வறட்சியால் தத்தளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்

புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக பொய் சொல்கின்றனர் என்றும் மின்சார பேருந்துகளுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் தான் 14500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன என்றும் பழைய பேருந்துகள் சீரமைப்பது மட்டுமே திமுக செய்து வருகிறது என்றும் அரசு பேருந்துகளில் பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments