Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை காப்பாற்ற தெரியாதவர் பீகார் சென்று பிரதமரை உருவாக்க போகிறாரா? ஈபிஎஸ்

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (15:09 IST)
தமிழ்நாட்டையே காக்க தெரியாதவர் பீகார் சென்று பிரதமர் வேட்பாளரை உருவாக்க போகிறாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார் 
 
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் கூறுவது பொய் என்றும் முப்பதாயிரம் கோடி ஊழல் கொடுத்து பேசினால் வழக்கு தொடர்வேன் என்று பயமுறுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். 
 
இரண்டு ஆண்டு ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
தொட்டு பார், சீண்டிப்பார் என்று முதல்வர் பேசுகிறார், எங்களை அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பேசுகிறார், இப்படிப்பட்ட முதலமைச்சர் ஆட்சி செய்வது தமிழகத்துக்கு அவமானம் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 
மேலும் தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் மு க ஸ்டாலின் பீகாரருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்க போகிறாரா என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments