Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (12:37 IST)
நாளை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஐந்து கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு சென்னையில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

இதனால் மக்கல் பலர் அன்றாட உணவுக்கு சிரமப்பட வேண்டி வரலாம் என்பதை கருத்தில் கொண்டு முந்தைய ஊரடங்குகளில் செயல்படுத்தப்பட்டது போலவே இந்த பொதுமுடக்கத்திலும் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

ரூ.13,500 கோடி மோசடி செய்த மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது! ராணாவை அடுத்து நாடு கடத்தப்படுவாரா?

அதிகாரம் மிக வலிமையானது.. அரசியல் வழி சமத்துவ சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்! ஆதவ் அர்ஜூனா

நமது கொள்கை தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள்.. தவெக விஜய் மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments