Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: விடுவிக்கக் கோரி ஈபிஎஸ் மனு..!

Mahendran
புதன், 25 செப்டம்பர் 2024 (13:10 IST)
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். 
 
இதனைத் தொடர்ந்து, தயாநிதி மாறன், எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு னு அக்டோபர் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments