Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு: குஷியில் முதல்வர்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (17:58 IST)
குஜராத் அரசின் சார்ப்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழா ஒன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை இதுதான். 
 
இந்த சிலை திறப்பு விழா படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனை மோடி திறந்து வைக்க உள்ளார். எனவே, இந்த விழாவில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு குஜராத் பழங்குடி முன்னேற்றம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கண்பத் வாசவா தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் வந்து அழைப்பிதழ் கொடுத்தனர். 
 
சர்தார் வல்லபாய் படேலின் சிலை, நர்மதை நதிக்கரையில் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments