Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு போன் போட்ட எடப்பாடியார்: உடல்நிலை குறித்து விசாரணை!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (12:32 IST)
நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இதனை அடுத்து ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் அவர் அங்கு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. 
 
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும்பட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அவர் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments