ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: விருப்பமனு அளிக்க கடைசி தேதியை அறிவித்த ஈபிஎஸ்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (11:59 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக தரப்பில் வேட்பாளர் விருப்பமனு தாக்கல் செய்ய தேதியை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் ஜனவரி 26 ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவித்துள்ளார் 
 
 இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூபாய் 15,000 கட்டண தொகை செலுத்தி அதிமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments