Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமற்ற பொங்கல் தொகுப்பு பொருட்கள்; எடப்பாடியார் விமர்சனம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:17 IST)
தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றவையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பை வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் பொங்கல் தொகுப்பு பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்து விமர்சித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ரேசனில் தரப்பட்ட பொங்கல் பை தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்றவையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கமிஷன் நிறைய கிடைக்கும் என்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து ரேசன் பொருளை வாங்கியுள்ளனர்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments