Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு பெரிய கும்பிடு; ஏன் திமுக? ஈபிஎஸ் அண்ணன் பேட்டி!!

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (12:29 IST)
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக முதல்வராகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன் நேற்று சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
 
எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்து வந்தவர் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் சகோதரரே இப்படி திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் என விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதவடது, அதிமுகவில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லாம் நடக்க வேண்டும். மக்கள் விரோத போக்கு அக்கட்சியில் ரொம்ப அதிகமாக உள்ளது. 
 
அங்கு சுதந்திரமாக எதிலும் செயல்பட முடியவில்லை. சுதந்திரமாக செயல்பட கூடிய ஒரே கட்சி திமுகதான். மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டால் திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments