Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவும் தேர்தல் யுக்தியோ? பொங்கல் காசை ஏகத்துக்கும் கூட்டிய ஈபிஎஸ்!!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (15:42 IST)
அரிசி குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
இன்று முதல் தனது சொந்த தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய எடப்பாடி பழனிச்சாமி, 2021 பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
இதனோடு, ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியும் வழங்கப்படுமாம். ஜனவரி 4 ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இத்தனை ஆண்டுகளாக ரூ.1,000 தொகை மட்டுமே பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ரூ.2,500 வழங்கப்படுகிறதா? அல்லது தேர்தல் காரணமாக அதிகரித்து வழங்கப்பட உள்ளதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments