இரட்டை இலை இல்லாமலே போட்டியிட ஈபிஎஸ் திட்டம்.. இன்று வேட்பாளர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (07:55 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதை அடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் மாற்றுச்சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தெரிகிறது. தற்போதைய டெக்னாலஜி உலகில் ஈரோடு கிழக்கு என்ற ஒரு சின்ன தொகுதியில் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்பதால் எந்த சின்னமாக இருந்தாலும் சரி அதில் போட்டியிட தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்யவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments