Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (08:25 IST)
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் குடலிறக்க சிகிச்சை நடைபெற்றது அதன் பின் அந்த அறுவை சிகிச்சையின் காரணமாக அவ்வப்போது பரிசோதனை செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் குடலிறக்க அறுவை சிகிச்சை குறித்த பரிசோதனைக்காக இன்று அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு சில பரிசோதனைகளுக்கு பின்னர் அவர் சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments