Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிதி அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நிதி அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
, வியாழன், 24 மார்ச் 2022 (13:23 IST)
சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ் நிதி அமைச்சராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 
 
அவர், நிதித் துறை சார்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முறையாக பதிலளிக்க முடியாமல் கையில் இருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். 
 
இந்த செயலைக் கண்டித்து தற்போது நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிடெக்னிக் மாணவிகளுக்கும் உதவித்தொகை! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!