தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறிது நேரத்திற்கு முன்னர் அவரது அழைப்பின்பேரில் ராஜ்பவனில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தனக்கு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமியுடன் முத்த அமைச்சர்கள் 10 பேர் ஆளுனரை சந்தித்தனர்
இந்நிலையில் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், 'தங்கள் அணிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகவும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் அவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும் 124 எம்எல்ஏ-க்கள் ஆதரவு எங்களிடம் உள்ளதால் ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் கூறினார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!