Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா ஜெயிலுக்கு போனதை எடப்பாடியார் கொண்டாடினாரா? மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (21:55 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில் இன்று கூவத்தூர் சென்று அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சசிகலா ஜெயிலுக்கு போனதை அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடியார் பட்டாசு வெடித்து கொண்டாட சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற அளித்த தண்டனைக்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியதாகவும், தற்போது எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூவத்தூரில் நடைபெறும் குதிரை பேரத்தை  தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும்,  வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க மக்கள் தயாராகி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments