Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''எடப்பாடி பழனிசாமி நன்றி மறந்துவிட்டார்'' - ஹெச்.ராஜா

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (21:13 IST)
''எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி   நன்றி மறந்துவிட்டார்'' என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அதிமுக,பாஜக இடையே சமீபத்தில் கருத்து மோதல் அதிகரித்து வந்த நிலையில், அதிமுக பாஜக கூடணியில் விரிசல் ஏற்பட்டது. எனவே  சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் இன்று  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள், பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இத நிலையில்,  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி   நன்றி மறந்துவிட்டார். அதிமுகவில் இருந்து விலகியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது அதிமுகவிற்குத்தான் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments