Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் கையெழுத்தான முதல் ஒப்பந்தம் – தமிழகத்துக்கு வருகிறது கிங்ஸ் மருத்துவமணை !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (09:21 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் திறக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணத்தின் முதல் கட்டமாக லண்டன் சென்றுள்ள அவர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனைகளின் கிளைகளை தமிழகத்தில் நிறுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு விமர்சனங்களுடன் வெளிநாடு சென்ற பழனிச்சாமி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்களும் வெறும் கண்துடைப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments