Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநிலமா? மாவட்டமா? பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு - (வீடியோ)

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (10:31 IST)
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் அடக்கம்.
 
குறிப்பாக கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் ஒரு மேடையில் பேசியது இப்போது வரைக்கும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சுந்திரதினம் டிசம்பர் 15 என ஸ்டாலின் பேசியதும் வைரலானது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெறும் மாவட்டம் தமிழ்நாடுதான்” எனப்பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ்நாடு ஒரு மாநிலம் என்பது கூட தெரியாமல் மாவட்டம் என ஒரு முதல்வர் பேசலாமா? என பலரும் இதை கிண்டலடித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments