Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநிலமா? மாவட்டமா? பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு - (வீடியோ)

Edapadi palnisamy
Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (10:31 IST)
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் அடக்கம்.
 
குறிப்பாக கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் ஒரு மேடையில் பேசியது இப்போது வரைக்கும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சுந்திரதினம் டிசம்பர் 15 என ஸ்டாலின் பேசியதும் வைரலானது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெறும் மாவட்டம் தமிழ்நாடுதான்” எனப்பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ்நாடு ஒரு மாநிலம் என்பது கூட தெரியாமல் மாவட்டம் என ஒரு முதல்வர் பேசலாமா? என பலரும் இதை கிண்டலடித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments