Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டதால் தான் கைது செய்யப்பட்டார்கள்”.. முதல்வர் விளக்கம்

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:16 IST)
வேறொருவர் வீட்டில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததினால் தான் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலமிட்ட பெண்களை போலீஸார் கைது செய்து, திருப்பி அனுப்பினர். பின்பு அதனை தொடர்பு தமிழகம் முழுவதும் பல பெண்கள் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக முக ஸ்டாலின், எம்.பி.கனிமொழி ஆகியோரின் வீட்டின் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலமிடப்பட்டிருந்தது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான திருமாவளவனும் கோலமிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் கோலமிட்ட பெண்கள் கைது குறித்து விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததினால் தான், கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர், தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்சனை இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments