Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலை சமாளிக்க புயலாய் திட்டம் போடும் முதல்வர்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (13:01 IST)
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் அதி கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் சில பகுதிகளிலும் கன மழை பெய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். 
 
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதோடு, உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்ப்ட்டுள்ளது. 
 
எனவே, புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்னவாக இருக்கும் என்பதை ஆலோசிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, கஜா புயல் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments