Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து தமிழக அரசின் வழக்கு: நாளை தீர்ப்பு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (16:53 IST)
ஐஏஎஸ் அதிகாரிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது தமிழ்நாட்டில் மட்டும் மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அமலாக்க துறையின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என்றும் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிம வளம் சட்டம் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 மேலும் ஆட்சியாளர்கள் ஆட்சியர்களிடம் ஆவணங்கள் கேட்பதற்கும் சம்மன் அனுப்புவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments