திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. ஆவணங்களை அள்ளி சென்றதாக தகவல்..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:45 IST)
திமுக பிரமுகர் சாமிநாதன் என்பவரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. 
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. 
 
இந்த சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில்  சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதனால்தான் சாமிநாதனை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments