Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் - இன்று தேதி அறிவிப்பு?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (09:51 IST)
சென்னை ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை, ஓட்டுப்போட வாக்களர்களுக்கு  பணம் கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
 
இந்நிலையில், வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் அங்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தற்போது தேர்தல் தேதியை அறிவித்தால்தான் அந்த தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் கட்டாயத்தில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. ஏனெனில், தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலில் நடத்தி முடிக்க வேண்டும். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே தேர்தலை நடத்தி முடிக்க வாய்ப்புள்ளது.
 
அதோடு, இரட்டை இலை யாருக்கு என்கிற குழப்பமும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச் சாவடிகளிலும், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் வி.வி.பேட் எந்திரங்களை பயன்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments