Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:36 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் வாக்களிக்க முடியவில்லை. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
 
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தன்னை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்ததால் இந்த செய்தி மேலிடம் வரை பரவி, சிவகார்த்திகேயனுக்கு சேலஞ்ச் முறையில் ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர். 
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments