Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் தங்கமணி

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (08:59 IST)
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின்வாரிய ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனால் மின்விநியோகம் பாதிக்கபப்டுமா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரிய ஊழியர் சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதனைப் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது

அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த வேலைநிறுத்தத்திற்கு காரணம். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வராமல் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது

மேலும் வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. அதுமட்டுமின்றி மின் தடையை தவிர்க்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை' என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கவேல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments