Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (17:47 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க இன்று கடைசி தினம் என்றும் இன்று மாலை 5 மணிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை கலந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்றும் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதன் பிறகு ஜனவரி 31, பிப்ரவரி 15 என கால அவகாசம் அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை 2.8 கோடி பேர் இணைத்துள்ளதாகவும் இன்னும் 7 லட்சம் பேர் இணைக்காமல் இருப்பதாகவும் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுவதாகவும் மீதமுள்ள 7 லட்சம் பேரும் 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு கண்டிப்பாக அவகாசம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments