Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (14:33 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகே உள்ள கொன்ரங்கி கீரனூர் என்ற பகுதியில் இன்று நள்ளிரவு பலமான சத்தத்துடன் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து பல வீடுகளில் விரிசலும் ஓடுகள் விழுந்தும் உள்ளன. இதையடுத்து மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இது சம்மந்தமாக அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகாமைப் பகுதிகளில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதால் இந்த நில அதிர்வு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments