Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி பாஸ்போர்ட் பெற இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்

இனி பாஸ்போர்ட் பெற இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்
, புதன், 23 செப்டம்பர் 2015 (00:28 IST)
தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

 
இது குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
தமிழ்நாட்டில், தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் உள்ளது. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் பாண்டிச்சேரியில் 9ஆவது மினி சேவா கேந்திரா மையம் ஏற்படுத்தப்படும்.
 
ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், அனைவருக்கும் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil