Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி போய் மெரினாவில் தியானம்: துரைமுருகனின் ஒரே ஸ்டேட்மெண்டில் ஓபிஎஸ் அவுட்

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (08:57 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் சசிகலா தரப்பினர் தனக்கு மரியாதை தருவதில்லை, அழுத்தம் கொடுக்கின்றனர் என கூறி பதவி விலகினார். 
 
ஆனால், அதன் பின்னர் சசிகலா தரப்பினர்தான் தனனி பதவியை ராஜினாமா செய்ய சொல்லி வர்புறுத்தினார்கள் எனவும் கூறினார். இப்போது அவரும் எடப்பாடியும் சேர்ந்துக்கொண்டு சசிகலா தரப்பினரை அதிமுகவைவிட்டே ஒதுக்கிவைத்துள்ளனர். 
 
இந்நிலையில், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட துரைமுருகன், ஓபிஎஸ் குறித்து கிண்டலாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, 
ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிபோனத்துக்கு ஒருவகையில் நானும் காரணம். சட்டசபையில் ஒருமுறை ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து நீங்களே முதல்வராக இருங்கள், அடுத்தும் நீங்களே முதல்வராக இருங்கள், உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்.
 
உடனே சசிகலா, துரைமுருகன் சொன்னால் ஏதோ இருக்கிறது. திமுகவிடம் ஏதோ பிளான் இருக்கிறது. இந்த சண்டாளன் சொன்னா, சொன்னமாதிரிதான். என்று ஓ.பன்னீர்செல்வத்தை கூப்பிட்டு, பதவியை விட்டு தூக்கிவிட்டனர். அதனை தொடர்ந்து தியானம் அப்படி இப்படி என அவர் இப்போது எப்படியோ மாறிவிட்டார் என நகைச்சுவையாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments