Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு: தொண்டர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:22 IST)
திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த பதவிக்கு போட்டியிடுவோர் இன்று விண்ணப்பிக்கலாம் எனவும் திமுக தலைமை அறிவித்து இருந்தது தெரிந்ததே
 
இதனையடுத்து இன்று காலை திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு சார்பிலும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். திமுக பொருளாளர் பதவிக்கு எ.வல்.வேலு, கனிமொழி, ஆ ராசா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டபோதிலும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் முடிவடைந்ததால் துரைமுருகன் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கும், டி.ஆர்.பாலு தவிர வேறு யாரும் பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை. 
 
எனவே துரமுருகன் திமுக பொதுச்செயலாளராகவும், டி.ஆர்.பாலு திமுக பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments