Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:12 IST)
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாடு அரசு தீவிரமாக தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதையும் பார்த்தோம். மத்திய அரசின் உதவியால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்து விட்டாலும் மீட்பு பணி காரணமாக இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தூத்துக்குடி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments