Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு - பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (18:27 IST)
நாமக்கல் டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் தற்கொலை தொடர்பாக, அவரது பெற்றோரிடம் இன்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மாநில இயக்குநர் ராமசாமி விசாரணை நடத்தினார்.

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த மாதம் நாமக்கலில் உள்ள காவலர் குடியிருப்பில் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற விசாரணையில் விஷ்ணுப்ரியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அளித்த தகவல்கள் அனைத்தையும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மாநில இயக்குநர் ராமசாமி  பதிவு செய்தார்.
 
அந்த தகவல்கள் அனைத்தும் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் 2 நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் ராமசாமி தெரிவித்தார்.
 
மேலும், இந்த தற்கொலை வன்கொடுமையால் நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தும் என அவர் கூறினார். தேவைப்பட்டால் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஆதிதிராவிடர் ஆணையம் பரிந்துரைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் ராமசாமி  கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments