Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:10 IST)
பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 
அதன் துவக்க விழா இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. "COPஅவள்" என்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை துவக்கி வைத்து நிகழ்ச்சி உரையாற்றினார்.முதல் கட்டமாக கோவை மாநகர தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 
இதில் நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். 
 
இந்த நிகழ்வில், கோவை மாநகர் ஆயுதப்படை காவல்துறை ஆணையர் முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments