Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் உயிரிழந்த டிரைவர்.. உயிர்தப்பிய பயணிகள்

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:48 IST)
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தனியிலிருந்து அரக்கோணத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை தேவதாஸ் என்னும் 50 வயது முதியவர் ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் சில விநாடிகள் தாறுமாறாக பேருந்து ஓடியது. பேருந்தை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்த டிரைவர் தேவதாஸ் பேருந்தை பிரேக் அடித்து நிறுத்தி மயங்கி விழுந்தார்.

பின்பு பேருந்து பயணிகள் உடனடியாக டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தேவதாஸ் இறந்துவிட்டதாக கூறினர். தான் உயிரிழக்கும் நிலையிலும் 40 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவரின் செயல், பெரும் பரிதாபத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments