Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது!

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (07:14 IST)
சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சட்ட கல்லூரி மாணவி, அவருடைய கணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து நிறுத்தும் இடம் அருகே நிறுத்திருந்த ஜீப் மீது பேருந்து உரசி உள்ளது. உடனே அதிலிருந்து நான்கு பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதம் செய்து அதன் பின்னர் திடீரென சரமாரியாக தாக்கி உள்ளனர்.
 
உடனே அந்த வழியாக வந்த பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கி விட்டு காரில் தப்பிய சட்ட கல்லூரி மாணவி உள்பட அவரைச் சார்ந்தவர்களை தேடினர்.
 
ஒரு சில நிமிடங்களில் அவர்கள் பிடிபட்டதை அடுத்து சட்ட கல்லூரி மாணவி அவரது கணவர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக சென்னை குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments