Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ஜப்பான் நிதியுதவி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
ரூபாய் 4276.44 கோடியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூர் என்ற பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்ற நிலையில் இந்த நிலையத்திற்கு இன்று முதல் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  
 
ரூபாய் 4,276.44 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
ஜப்பான் கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் இந்த கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு விட்டால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சே இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments