Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரஜினி மீது சட்ட நடவடிக்கை பாயும் வரை போராடுவோம்” திராவிடர் விடுதலை கழகம் கறார்

Arun Prasath
வெள்ளி, 24 ஜனவரி 2020 (20:26 IST)
பெரியார் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்  வரை போராடுவோம் என திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது.

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறிவந்தனர். மேலும் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த புகார் இன்று விசாரனைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் அளித்து 15 நாட்கள் முடிவடைவதற்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? எனவும், புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும், இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என கூறினார். இதனையடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் ”ரஜினி மீதான புகார்கள் மீது ஒரு வாரத்திற்கு பிறகு காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம்” என திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், “பெரியார் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்  வரை போராடுவோம் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments