Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைத்திருந்தால் ஆளுனர் ஆகியிருப்பேன்: டாக்டர் ராம்தாஸ்

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:32 IST)
நான் நினைத்திருந்தால் எப்போதோ ஆளுநராக ஆகியிருக்க முடியும் என்றும், ஆனால் தனக்கு ஒரு போதும் பதவி ஆசை இருந்ததில்லை என்றும் காடுவெட்டி குரு நினைவு மண்டபத்தை திறந்து வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார் 
 
 
தமிழகத்தில் இருந்து தற்போது தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராகியிருக்கும் நிலையில் தான் பாஜகவுடன் பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்த காரணத்தினால் எப்பொழுதோ தன்னால் கவர்னராகியிருக்க முடியும் என்றும் ஆனால் பதவியை பெற வேண்டும் என்ற ஆசை தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் கூறினார் 
 
 
மேலும் காடுவெட்டி குரு அவர்கள் மறைந்து விட்டார் என்பதை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு திமுகவினர் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்ததாகவும் பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் காடுவெட்டி குருவின் சொந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புமணி ராமதாஸ் முன்னின்று செய்வார் என்றும் அவர் உறுதி அளித்தார் 
 
 
பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தான் நினைத்திருந்தால் தன்னால் கவர்னாராகி இருக்க முடியும் என்று பேசியது தனக்கு கவர்னர் பதவி வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக தெரிவிக்கின்றாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments