Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிச்சின்னம் இல்லை, இரட்டை இலையில் தான் போட்டி.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி முடிவு..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (09:04 IST)
அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை பெற்று தென்காசியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என தெரிகிறது

இதனால் ஒரு புதிய சின்னம் வாங்கி, அந்த சின்னத்தை மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் கொண்டு செல்வது என்பது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்ட கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அதாவது அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார் என்பதும் அவர் வெற்றி பெற்றாலும் அதிமுக எம்பி ஆகவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைக்காத கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்குவது இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments