Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மீது சந்தேகம் - மனைவியை கொன்று கணவர் தற்கொலை ! திடுக் சம்பவம்

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (21:22 IST)
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். இவரது மனைவி கீதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கீதாவுக்கும், அவரது உறவினருக்கும் இடையே அதிக நெருக்கமான பழக்கமிருந்ததாகத் தெரிகிறது. இதை முருகேசன் கண்டித்துள்ளார். இதையடுத்து கீதா தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் கீதா, தன் பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்குச்சென்று கொண்டிருந்தார். பின்னர் கீதா வேலைக்குச் செல்லும் போது அவரை மறித்து குழந்தைக்காக தன்னுடன் சேர்ந்து வாழ முருகேசன் அழைத்துள்ளார். அதில் இரூவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனால் கோபம் அடைந்த முருகேசன் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து சாணிப்பவுடை குடித்த முருகேசன், துடியலூரை அடுத்த ராமாபுரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்போது கீதாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments