Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியிடம் ஏன் கேள்வி கேட்கின்றீர்கள்: ஞானவேல்ராஜா

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (13:50 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்க்க பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் கோடிக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும். தூத்துகுடி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கவில்லையே என ரஜினி உள்பட அனைத்து நடிகர்களிடமும் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
 
ஆனால் அதே மக்களுக்கு அவர்களுடைய தொகுதி எம்.எல்.ஏ, எம்பி யார் என்பது கூட தெரியாது. முதலில் ஓட்டு போட்ட எம்.எல்.ஏக்கள், எம்பிக்களிடம் மக்கள் கேள்வி கேட்க தொடங்கினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
 
ரஜினிகாந்த் இப்போதுதான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்குள் அவரிடம் கேள்வி கேட்பது முறையல்ல. ஆட்சி அமைத்தவுடன் அவர் எதுவும் செய்யவில்லை என்றால் பின்னர் கேள்வி கேட்கலாம் என்று ஞானவேல்ராஜா கூறினார். இவருடைய இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments