Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம்: தினகரன் கட்சி நிர்வாகி அறிவுரை

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (15:50 IST)
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என அம்முக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, தமிழிசை முன்னரே 'பாஸிச பாஜக ஒழிக' என்று விமானத்தில் கோஷமிட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீண்டும் கனடா செல்ல முடியாத வகையில் அவருடைய பாஸ்போர்ட் போலீசார் கையில் உள்ளது.

இந்த நிலையில் தினகரனின் கட்சியான அம்முகவின் கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி இதுகுறித்து கூறியபோது, 'தாயகம் திரும்பும் தமிழக மக்களே, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் விமானத்தில் ஒருபோதும் பயணிக்காதீர்கள் என்றும், பாஜகவோடு அ.ம.மு.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments