Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம்: தினகரன் கட்சி நிர்வாகி அறிவுரை

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (15:50 IST)
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என அம்முக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, தமிழிசை முன்னரே 'பாஸிச பாஜக ஒழிக' என்று விமானத்தில் கோஷமிட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீண்டும் கனடா செல்ல முடியாத வகையில் அவருடைய பாஸ்போர்ட் போலீசார் கையில் உள்ளது.

இந்த நிலையில் தினகரனின் கட்சியான அம்முகவின் கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி இதுகுறித்து கூறியபோது, 'தாயகம் திரும்பும் தமிழக மக்களே, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் விமானத்தில் ஒருபோதும் பயணிக்காதீர்கள் என்றும், பாஜகவோடு அ.ம.மு.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments