Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம்: தினகரன் கட்சி நிர்வாகி அறிவுரை

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (15:50 IST)
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பயணிக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என அம்முக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, தமிழிசை முன்னரே 'பாஸிச பாஜக ஒழிக' என்று விமானத்தில் கோஷமிட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீண்டும் கனடா செல்ல முடியாத வகையில் அவருடைய பாஸ்போர்ட் போலீசார் கையில் உள்ளது.

இந்த நிலையில் தினகரனின் கட்சியான அம்முகவின் கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி இதுகுறித்து கூறியபோது, 'தாயகம் திரும்பும் தமிழக மக்களே, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் விமானத்தில் ஒருபோதும் பயணிக்காதீர்கள் என்றும், பாஜகவோடு அ.ம.மு.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments