Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவேம்பு குடிநீரை கொடுக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (08:13 IST)
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், குணப்படுத்தவும் தமிழக அரசு உள்பட சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை விநியோகம் செய்து வரும் நிலையில் நிலவேம்பு குடிநீரை தனது ரசிகர்கள் விநியோகிக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 



 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
 
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
 
என்றும் அவர் இரண்டு டுவிட்டுக்களில் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments